சூன்யம்
மார்கழிப் பனியில்
காலை அழகைக் காணவும்
எனக்கு எண்ணமில்லை!
மழை நாளில்
தூறல் பிடித்து விளையாடவும்
எனக்கு விருப்பம் இல்லை!
ஓடும் பேருந்தில்
ஜன்னலில் வேடிக்கை பார்க்கவும்
எனக்கு ஆவலில்லை!
நிலா முற்றத்தில்
நண்பர்களோடு கதை அளக்கவும்
என்னக்கு நாட்டமில்லை!
பூக்களோடு கைகள் குலுக்கி
இதமாய்ப் புன்னகைக்கவும்
எனக்கு இதயமில்லை!
வண்ணத்துப்பூச்சியின் முதுகிலேறி
சின்னக் கவிதைகள் இயற்றவும்
எனக்கு இயலவில்லை!
நீர்க்குமிழியை ஊதி
அது உடைந்த பின் அழவும்
எனக்கு மனமில்லை!
அலைகள் துரத்த நான் ஓட
கலைப் பொருளாய் சிப்பி எடுக்கவும்
எனக்கு ஆசையில்லை!
அகல் விளக்கின் நெருப்பில்
வேகமாய் விரல் விட்டு நீக்கவும்
எனக்கு விருப்பம் இல்லை!
நுண்ணிய நிகழ்வுகளிலெல்லாம்
ரசிக்கும் சிந்தை இல்லை ...
அன்பே நீ சென்ற பின்னே!
- ஆசுரா
(காலைக்கதிர் 10 -02 -2002 )
Nice One Raja. Would like to see more of your creations here.
ReplyDelete